Saturday 28 March 2020

இயற்கை அபகரிப்பு பேராபத்து

                                                     

மரம்-மழை, மரம்-காற்று, மரம்-நிழல் மரம்-உயிர் ...
கிளி வளர்த்தேன் பறந்து போனது
அணில் வளர்த்தேன் ஓடி போனது
ஆனால் மரம் வளர்த்தேன் இரண்டும் திரும்பி வந்தது.. இதை உணர்வால் புரிந்து கொண்டால் மட்டுமே இயற்கை வளங்களை காக்கமுடியும்...

மனிதன் வாழ  தேவையான நிலம் நீர் காற்று போன்றவற்றை பாரபட்சமின்றி இயற்கை நமக்கு அளித்து வருகிறது... பதிலுக்கு நாம் என்ன செய்கிறோம்?
காடுகளை அழித்து குடியேறுவது, மரங்களை வெட்டி வீடு கட்டுவது, கேட்டால் மக்கள் தொகை பெருகுதல், நகரமயமாதல் போன்ற காரணம்...

இவற்றை கட்டுப்படுத்த தனி மனிதனோ அரசாங்கமோ கடுமையான நடவடிக்கையை எடுத்த பாடில்லை ... உலகில் மக்கள் தொகை பெருக்கம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து இயற்கை வளங்களை குறைத்து வருகிறது..
2050 ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை 9.7 பில்லியனாக இருக்கும் என்று ஐ.நா. ஆய்வறிக்கை 2019ல் கூறியிருக்கிறது... 
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இன்னும் 8 ஆண்டுகளில் உருவெடுக்கும் என தெரித்துள்ளது..
இந்த மக்கள் தொகை பெருக்கம் காரணமாக இயற்கை அபகரிக்கப்பட்டாலும் மனிதன் தன் அத்தியாவசிய தேவைகளை கட்டுப்படுத்தாமல் இருப்பது  இயற்கை அபகரிப்புக்கு ஒரு காரணம்...

மனிதன் பயன்பாட்டிற்கு அபகரித்து கொண்ட இயற்கை வளங்களை மறு உற்பத்தி செய்வதற்கு இயற்கை ஒரு குறிப்பிட்ட காலம் எடுத்து கொள்ளும்...
ஆனால் ஒவ்வொரு நாளும் இயற்கை அபகரிப்பு அதிகரித்து வருகிறது...

ஜூலை 29, 2019 - இந்த ஆண்டின் 209 நாட்களிலேயே ஒரு வருடத்திற்கான இயற்கை வளங்களை பயன்படுத்திவிட்டோம் என்று ஐ.நா. அறிக்கை தெரிவித்துள்ளது....
இயற்கைக்கு எதிரான செயல்கள் அனைத்தும் ஒரு சங்கிலி போன்றது.. பொளாதார வளர்ச்சி.., அதனால் ஏற்படும் புதிய தொழில்நுட்பங்கள்...தொழில்நுட்பம் ஏற்படுத்தும் எளிய உற்பத்தி முறைகள்... இவை பொருளாதார வளர்ச்சியில் ஒரு நாட்டிற்கு நன்மை அளித்தாலும் இவைதான் மக்கள் தொகை பெருக்கத்தை தீர்மானிக்கிறது....
18 ஆம் நூற்றாண்டில் ராபர்ட் மால்தாஸ் என்ற ஆங்கிலேயே பொருளியலாளர் மக்கள் தொகை பெருக்கம் குறித்த நூலில் உணவு உற்பத்திதான் மக்கள் தொகையை தீர்மானிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.....
மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப உணவு உற்பத்தி இருக்காது என்பதால் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியும் என்கிறார்....
ஆனால் 20 ஆம் நூற்றாண்டில் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை பெருக்கி இயற்கையை அழித்தும் வருகிறோம்...
ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 16 கிலோ ஆக்ஜினை சுவாசிக்கிறான்.. இதில் 20 சதவீதம் அமேசான் காடுகளில் இருந்து கிடைக்கிறது...
மரம் வெட்டுதல், விவசாயத்திற்காக காடுகளை அழித்தல், உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த ஆண்டை விட அமேசான் காடுகளில் 83 % காட்டுத்தீயின் அளவு அதிகரித்துள்ளது...
இவ்வாறு காடுகளை அழித்தல், நிலத்தடி நீர் குறைத்தல், நிலம்,நீர் காற்று மாசுபடுத்துதல், போன்ற இயற்கை வளங்களங்களுக்கு ஏற்படும் பேராபத்து மனித குலத்தையும் நெருங்கி கொண்டிருக்கிறது என்றும் என்பதை மனதில் வைத்து இயற்கை வளங்கள் அபகரிக்கப்படுவதை கட்டிபடுத்த வேண்டும்.....

No comments:

Post a Comment