Saturday 4 April 2020

மீனாச்சியும் பட்டாம்பூச்சியும் தொடர்கதை - பாகம் 1

மாலை 5 மணி, தட்டு  நிரம்ப தின்பண்டங்கள், தாத்தாவின் திட்டு, புங்கன் மரத்தின் தாலாட்டு, கச்சை கட்டில்  அதன் மேல் படுத்து விடலாமா இல்லை உட்காரலாமானு நான் நெளிந்துகொண்டிருதேன் .
என்னை திட்டியதில் மூச்சுவாங்கிகொண்டு காய்ந்த இலைகளை கூட்டிகொண்டிருந்தார் தாத்தா. சாப்பிடுவதற்கு உட்கார்தால்தன் வசதிபடும் என்று,  ஒருவழியாக உட்கார்ந்து  நொறுக்கு தீனிகளை திணித்துகொண்டிருக்க, மரத்திலிருந்து தாவி தட்டிலிருந்த ஐந்து சுற்று போட்ட முறுக்கை உடைத்தால் மீனாச்சி. நான் கோவத்தில் மீனச்சியை பார்க்க, உனக்கு இப்பிடிதா வெனுனு கிண்டலாக என்னை பார்த்து தாத்தா சிரிக்க, மீனாட்சி டக்குனு தாத்தா கூட்டிகுவிச்ச இலைகளின்மீது தாவி ஒலிந்து கொண்டால். ஏய் உனக்கு என்ன லொல்லு , பாலுக்கு கால சுத்துவல இணைக்கு உனக்கு பச்ச தண்ணிதான்னு கையிலிருந்த வெலக்கு மாத்தால் மீனச்சியை தள்ளி விட போக, மீனா பட்டுனு நிலத்தோடு ஓரசிட்டுருந்த புங்கன் கிழைய தாவிட்டா. 
வெலக்குமாதுலலிருந்து ஒரு குச்சி எடுத்து கோவமா மீனாச்சி மேல வீசுநாறு தாத்தா. நா உடஞ்ச முறுக்கையும் விடாம பொறுக்கி சாப்டுட்டு மீனாச்சியை பாக்க, மீனாட்சியின் பார்வை என் பக்கம் திரும்பியது. வாயில் பாதி அரைத்து வைத்த  முறுக்கை கண்ணை மூடி முழுங்கிட்டு மீனாவை பார்க்க, பொக்கைவாயிலிருந்த ஒத்தபல் தெரிய தாத்தா சிரிக்க, மீனாட்சி படார்னு தாவுனா........